தமிழ் ஈழம் கிடைக்க என்னதான் வழி ?

இன்று அனைத்து தமிழ் மக்களின் பார்வையும் ஜெனிவாவை நோக்கி திரும்பியுள்ளது.  காரணம் தமிழன்அழியும்போது சர்வதேசம் கண்டும் காணாமல் இருந்தது தமிழன் நீதி கேட்டுப் போராடும் அழுத்தம்  காரணமாக  இலங்கை அரசுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை  கொண்டு வரபோகின்றதாக சொல்கிறார்கள். இவர்கள் சொல்வதைப் போல செய்ய  போகிறதுமில்லை  அப்படியே நிறைவேற்றினாலும் இலங்கை
அரசை மிரட்டி தங்களது  சொந்த  நலனைப்  பெற்று  கொள்வதற்காகதான். அதனால்தான் தமிழர் கடந்த காலத்தைப் போல் நம்பி ஏமாறாமல் ஒற்றுமையுடனும் மிகுந்த  விழிப்புடனும்  போராட்டத்தை  முன்னெடுத்து வருகின்றனர் 

அதன்  அழுத்தமே  ஐக்கிய  நாட்டு  சபையை இப்படி பேச வைக்கிறது. இதில் இந்திய அரசின் பங்கை தமிழர் எதிர் பார்க்கவில்லை அவர்கள் வழமை  போலவே கழுத்தறுத்து விடுவர். சிலவேளை இலங்கை அரசை எதிர்த்து வாக்களிகலாம் அது சர்வதேசத்தில் தமிழர்களின் போராட்டத்தினால் அன்றி வேறு இல்லை. இந்திய மத்திய  அரசானது தாங்கள்தான்  தமிழரின் பாதுகாவலர் போல பிரச்சாரம் செய்யலாம். ஆனால் தமிழர்கள் எளிதில் பழைய அனுபவத்தை மறக்கமாட்டார்கள், ஏமாறவும்  மாட்டார்கள்,  தமிழ் ஈழம் கிடைக்க  என்னதான் வழி ?
நான் அண்மையில் வாசித்த குறிப்பு என்னை சிந்திக்க வைத்தது எனது சிந்தனையில் பட்டத்தை உங்களுடன் பகிந்து கொள்கின்றேன் இது  நிறைவேறுமா  எனக்  கேட்டால்  எனக்குத்  தெரியாது   ஆனாலும்  இந்த வழியிலும் முயற்சிப்பது நல்லது  என நினைக்கிறேன்
இந்த நூ
ற்றாண்டின் சித்ர் என  அழைக்கப்படும்யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அருளிய  தத்துவக்  குறிப்பு; 


''நமது ஐவகைக் கடமைகளில் கடைசியில் வரும் உலகக் கடமையினை ஆற்றுவதில் முடிந்த வரையில் மிகுதியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பொருளிலோ, செல்வாக்கிலோ, உடல் கட்டிலோ போதிய வலிவு இல்லாத நாம் எப்படி உலக நலக் கடமையினை ஏற்று ஆற்ற முடியும் என்று எவரும் மலைக்கவோ, சோர்வுறவோ வேண்டாம்.

        உங்களிடம் தவத்தால் உறுதி பெற்ற மனோ வலிவு இருக்கிறது. உலக நலத்திற்காக உங்கள் விருப்பத்தைச் சங்கற்பமாக்கிப் பல தடவை உள்ளுக்குள் ஒலித்துக் கொள்ளுங்கள். சிதாகாசமாக இயங்கும் உங்கள் உயிராற்றலிலிருந்து கிளம்பும் அந்த உயர்ந்த நினைவு அலை மகாகாசம் என்ற பேரியக்கத் தொடர்கள் உயிரோடு கலந்து அந்த விருப்பம் நிறைவேற வழிவகுத்துக் கொள்ளும்.

        உங்கள் கடமைகளில் ஒன்றாக நாள்தோறும் "வாழ்க வையகம்" என்ற மந்திரத்தைப் பத்து தடவையாகிலும் நமது உடன் பிறந்தவர்களாகிய உலக மக்கள் அனைவரையும் விரிவாக நினைந்து ஒலித்துக் கொண்டிருங்கள்.

        அன்பர்கள் பலருடைய இத்தகைய எண்ண உறுதி செயல்படுத்துவதற்காக எந்த நாட்டிலோ, ஒரு வெற்றி வீரனைப் பிறக்கச் செய்யலாம். அல்லது இப்போது உள்ள உலக நல நாட்டம் கொண்ட ஒருவரையோ, பலரையோ உலக நலத் தொண்டில் முழுமையாகத் திருப்பிவிடலாம். பேரியக்கத் தொடர் களத்தில் அத்தகைய மாபெரும் ஆற்றல் அடங்கியுள்ளது.''
இந்த  தத்துவ குறிப்பின்படி உடல் கட்டிலோ  வலுவிலோ  அல்ல  சங்கற்பமாக்கிப் பல தடவை உள்ளுக்குள் ஒலிபதில்  வெற்றி தங்கியுள்ளது ஒருவேளை நீங்கள் இந்த  கலையை கற்றிருந்தால் உங்களது  தியான  வேளையில் தமிழ் ஈழம் விரைவில் கிடைக்கவேண்டும் வாழ்கவளமுடன் என மூன்று தடவை சொல்லவும் . எனவே தாமதிக்காது இன்றே தொடங்குங்கள் .


Read More

ஊர்தோறும் எமது அவலம் உரைத்திடுவோம்

இனமானம் காப்பதற்கு கொடிபிடித்து நாள்தோறும்
குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார்.
தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி 
திகைப்பூட்டி தீதுசெய்ய தூண்டுகின்ற காலமிது ! 
நம்பிக்கை வாழ்வை இன்று நசுக்கிடும் காரணிகள் 

 நடைபோடும் காலமிது ! நலம்மாய்க்கும் நேரமிது !
உறக்கத்தைக் கலைத்திடுவோம்
ஊர்தோறும் எமது அவலம்  உரைத்திடுவோம்
உலக மொழிகளில் எமது அவலம்  பெயர்த்திடுவோம் 
ஒற்றுமையை  வளர்த்து  இலக்கை வென்றிடுவோம்.
Read More

உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?

 

இந்தப் பதிவானது அனைத்துத் தமிழனும் வாசிக்க வேண்டியதொன்று ''இந்திய மதிய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி எதுவும் செய்யவில்லை. தமிழருக்கு    மனிதாபிமான மருத்துவ உதவி மட்டுமே  செய்தது'' .  இக்கூற்றை பல அப்பாவி தமிழர்கள் நம்பினர். இது உண்மையா?



இராணுவத்தினர் வன்னி நோக்கி மூர்க்கத்தனமாக  தாக்கி கொண்டு செல்லும்  போது,  புலிகள் இரணைமடுக் குளத்தின் அணையை  உடைத்து இராணுவத்தினருக்கு பலத்த உயிர் சேதம் ஏற்படுத்தியது; அனைவரும்   அறிந்ததே! இதில் பல நாட்டு இராணுவத்தினரும்  இறந்தனர் என்பது இரகசிமல்ல, பல இந்திய இராணுவத்தினரும் கொல்லபட்டன்ர். இதனால் கோபம் அடைந்த இந்திய மதிய அரசு யாருமே  செய்ய    துணியாத ஒரு   கிழ்த்தரமான   இன அழிப்பை   தமிழர் மீது கட்டவிழ்த்து விட்டது. திருகோணமலை கடற்படைத்தளத்தில் வந்திறங்கிய ஒரு தொகுதி இந்திய இராணுவ மருத்துவர்கள் மக்களுக்கு மனிதாபிமான மருத்துவ உதவி செய்வதற்காக வந்ததாக சொல்லபட்டது.அதை நம்பி சென்றவர்களின் கைகள்,கால்கள் வெட்டி அகற்றிவிட்டனர். இப்படியாக கணிசமாவர்களை  ஊனமாக்கியது இந்திய இராணுவ மருத்துவர்கள். இவர்கள்  உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?(ஒய் திஸ் கொல வெறி?) இப்படியாக பல வகையிலும் தமிழ் இன அழிப்புக்கு துணை நின்றதுடன் போர்  குற்ற  வழக்கை  இலங்கைக்கு  உள்ளே  நடத்தும்  படி சொல்வதுடன் இலங்கை அரசுடன் ஒத்துழைக்கும் படி தமிழ் தேசிய கூட்டமைப்பை வற்புறுத்தி வருகின்றது. 


புலிகளை  ஒழித்து விட்டால் தமிழர்கள் போராட மாட்டார்கள் என கனவு கண்ட சர்வதேசம் புலம் பெயர் தமிழர் எழுற்ச்சியுடன் முன்னெடுக்கும் போராடம் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், இந்த எழுற்சியை குறைக்க இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள் மறுபடியும் ஒன்று  சேர்ந்து  சதித்திட்டம் வகுக்க தொடங்கிவிட்டனர். அதன் அறிகுறியே அடுக்கடுக்காக இலங்கைக்கு செல்வதும்,  இலங்கை அரசை  எதிர்த்து அறிக்கை விடுவது. உறுதிமொழி. வழங்குவது என தொடர்கிறது .
நல்ல உதாரணம் : கொலைர் தமிழகத்தில் அரை நாள் உண்ணாவிரதம் என தமிழரை ம்பவைத்து ஏமாற்றியது. தமிழர் எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். இதே பாணியில் இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள்  களம் இறங்கியுள்ளது .பல வருடங்களாக நம்பி ஏமாந்தது போதும்.எமக்கு நீதி கிடைக்கும்  வரை ஒற்றுமையுடன் மிகுந்த விழிப்பாக போராடுவது ஒவொரு தமிழனின்  கைகளில் தங்கியுள்ளது. 
                          ஹ ஹ யார் அந்த சிங்க சொங்?
                    படத்தை  பாருங்கள்  பதில்  புரியும்
Read More

இந்தப் பூமி அழிந்து விடப்போகின்றதா? எப்போது 2012 அல்லது 2060 ??

இந்தப் பூமி அழிந்து விடப்போகின்றதா? எப்போது  2012 அல்லது  2060

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Read More

அருளின் வடிவம்

உம்மைக் கண்டாலே என்றும்   ஆனந்தமையா 
உம்மை புகழ்ந்தால் என் நாவு  இனிமையாகும்  
உன் வழி சென்றால் என் கால்கள் தாளரவில்லை 
உம்மை நினைத்தால் என் நினைவுகள் நிறைவாகிறது 
என் கைகள்  உம்மையே  வேண்டி  நிற்கிறது 
எங்கும் இருப்பவர் நீரே

என் குறைகளைத் தீர்ப்பவர் நீரே 
அன்பு உள்ளம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே 
அன்பாய்  என்னைக் காப்பவரே
ஆறுதல் எனக்குத் தருவபரே 
அவனியில் உம் அன்புக்கு  நிகர் யாரு?

Read More